
Aakash Chopra trolls Australia after their stunning second innings collapse to India (Image Source: Google)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்ஹிரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்த, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் மூன்றாவது நாளில் ஒரு மணி நேரத்தில் 9 கேட்ச்களை இழந்து அந்த அணி படுதோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது.