Advertisement

ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 24, 2025 • 08:38 PM

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது எதிர்வரும் ஜூன் 13அம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 24, 2025 • 08:38 PM

இத்தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா மற்று விராட் கோலி உள்ளிட்டோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து அணியின் கேப்டனுக்காக தேடல் இருந்தது. இந்நிலையில் தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் வய்ப்பு கிடைத்துள்ளது.

அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், முகமது ஷமி, அக்ஸர் படேல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக உள்ளூர் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. 

ஏனெனில் ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற இந்தியாவின் அனைத்து உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் தேர்வு செய்யப்படாதது பெரும் விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்நிலையில் தாற்போதுள்ள டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமில்லை என்று தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அகர்கர், “சமீப காலங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்ட்டுள்ளார். ஆனாலும் தற்போது டெஸ்ட் அணியில் அவருக்கு இடமில்லை. அதேபோல் சர்ஃபராஸ் கான் தனது, முதல் டெஸ்டில் அவர் 100 ரன்கள் எடுத்தார், ஆனால் அதன் பிறகு ரன்கள் எடுக்கவில்லை. அதனால் சில முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்க வேண்டிவுள்ளது. மறுபக்கம் ​​கருண் நாயர் உள்ளூர் போட்டிகளில் ரன்களைக் குவித்து வருகிறார். 

மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறிது காலம் விளையாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தொடர்ச்சியாக கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். தற்போது விராட் கோலி இல்லாத காரணத்தால், கருண் நாயரின் அனுபவம் உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம். இதுதவிர்த்து ஷர்துல் தாக்கூரை ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக நங்கள் பார்க்கிறோம். சில சமயங்களில் அணியின் சமநிலையைப் பொறுத்து அதுபோன்ற ஒரு வீரர் உங்களுக்குத் தேவைப்படலாம்” என்று தெரிவித்துள்ளார். 

ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2024ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார், அதன் பிறகு அவர்ர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும், உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதன் மூலம் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெற அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். ஆனாலும் அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement