Advertisement

மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி எடுத்துள்ள மோசமான முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்வுக்குழுவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 14, 2023 • 20:48 PM
BCCI selection committee SNUBS Sanju Samson again!
BCCI selection committee SNUBS Sanju Samson again! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி முடிவடைந்தது. இந்த தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறும்.

டெஸ்ட் தொடரின் போது அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டதால் தொடக்கம் முதல் இறுதி வரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடக்கத்திலேயே பிரச்சினை தான். நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். முதுகுவலி பிரச்சினை எனக்கூறி ஸ்கேன் எடுத்த போது, ஸ்ரேயாஸுக்கு பழைய காயமே ஆறாமல் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டனர்.

Trending


இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கு அனுபவ வீரரான சஞ்சு சாம்சன் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் 66 ரன்கள் என்ற சராசரியை கொண்டுள்ளார். எந்த இடத்தில் வேண்டுமானாலும் மாற்றி களமிறங்கக்கூடியவர். இக்கட்டான சூழல்களில் மிடில் ஆர்டரில் இருந்து அணியை காப்பாற்றுவார், ஃபினிஷராகவும் செயல்படுவார். இதனால் சாம்சனுக்கு ஒருவழியாக வாய்ப்பு கிடைத்துவிட்டது என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில் அதற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவொரு மாற்று வீரரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்றும், இருக்கின்ற வீரர்களே ஆஸ்திரேலியாவை சமாளிக்க போதும் என தேர்வுக்குழு தெரிவித்துவிட்டது. இதனால் மீண்டும் ஒருமுறை சஞ்சு சாம்சன் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றிருக்கிறார். இவரை ஸ்ரேயாஸின் இடத்தில் களமிறங்க வைப்பார்கள் எனத்தெரிகிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டை போல சூர்யகுமார் யாதவால் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிக்க முடியவில்லை. இதனால் அவரை எப்படி பயன்படுத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், அடுத்ததாக வரவுள்ள ஐபிஎல் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் ஸ்ரேயாஸுக்கு மாற்று தேவைப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement