
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீர ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே 200 இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்று பெருமையை அஸ்வின் படைத்திருக்கிறார். தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணியில் ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
இதனால் அஸ்வினின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஆஸ்திரேலியா அணியின் மேட் ரென்ஷா அஸ்வினை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ரென்ஷா, “அஸ்வின் ஒரு புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர் அவர் நிறைய விதமான பந்துகளை வீசி நம்மை நெருக்கடிக்கு ஆளாக்குவார். பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும். ஆனால் அஸ்வின் ஓவரை கொஞ்சம் தாக்கு பிடித்தால் அதன் பிறகு அவருடன் விளையாடுவது சுலபமாக இருக்கும். இந்தியாவில் அஸ்வினை எதிர் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். பொதுவாக ஆப் ஸிபின்னர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் போது அதிக முறை எல் பி டபிள்யூ ஆக வாய்ப்பு இருக்கிறது. பந்து திரும்பும் என நினைத்து இடது கை பேட்ஸ்மேன் விளையாடும்போது அது நேராக வந்து காலில் பட்டு எல் பி டபிள்யூ ஆகி விட அதிக வாய்ப்பு இருக்கிறது.