
Anderson-Tendulkar Trophy: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாஅவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. மறுபக்கம் இந்திய அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விக்கும் இதுவரை பதில் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது குறித்த இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.