Advertisement

டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 06, 2023 • 20:04 PM
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக் (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியான 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனைத்து வீரர்களும் அபாரமாக விளையாடியும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை துவங்கியுள்ள இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விரைவில் இந்தியா களமிறங்குகிறது.

Trending


இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ஏனெனில் தற்போதைய அணியில் பும்ராவை தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஷிதீப் போன்ற இளம் பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவதாகவும் விமர்சித்துள்ளார். 

இதுகுறிது பேசிய அவர், “நீங்கள் சொல்வது சரியானது. ஏனெனில் பும்ரா தவிர்த்து டெத் ஓவர்களில் அசத்தக்கூடிய எக்ஸ்பர்ட் பவுலர்கள் நம்மிடம் இல்லை. அது உங்களுக்கு டி20 உலகக் கோப்பையில் டெத் ஓவர்களில் யார் பந்து வீசுவார்கள் என்ற பிரச்சினையை ஏற்படுத்தலாம். சில நாட்களில் ரிவர்ஸ் ஸ்விங் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதை அர்ஷிதீப் செய்யக்கூடியவர் கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் கடைசி ஓவரில் அவர் நன்றாக பந்து வீசினார். 

ஆனால் கடந்த ஒரு வருடமாகவே அவர் பெரும்பாலான போட்டிகளில் கடைசிக்கட்ட ஓவர்களில் அசத்தவில்லை. டெத் ஓவரில் ஆவேஷ் கான் அசத்த மாட்டார். ஷமி, சிராஜ் போல முகேஷ் குமார் ஓரளவு சிறப்பாக செயல்படுவார். எனவே டெத் பவுலிங் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. அதனால் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் இந்த குறையை சரி செய்வதற்கு வேலை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது போல பும்ராவை தவிர்த்து இறுதிக்கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பும் அளவுக்கு தற்போதைய பவுலர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதனால் அடுத்து வரும் போட்டிகளில் சிராஜ், முகேஷ் குமார் போன்ற பவுலர்களை அந்த பிரச்சனையை போக்கும் அளவுக்கு தயார் செய்ய வேண்டியது அவசியமாகும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement