Advertisement

மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!

மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.

Advertisement
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 16, 2025 • 12:25 PM

Varun Aaron Prediction: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இந்த தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்யும் என முன்னாள் வீரர் வருண் ஆரோன் கணித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 16, 2025 • 12:25 PM

லார்ட்ஸில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் ஜூலை 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன் செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் என முன்னாள் வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய் அவர், "இந்திய அணியின் தற்போது வரையிலும் மூன்று போட்டிகளிலும் விளையாடிவுள்ளதால், பிளேயிங் லெவனில் அதிக மாற்றங்கள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் சில இடங்களில் மட்டுமே பிரச்சனை உள்ளது. மேலும் அதற்கான நேரம் இருப்பதால் அவை சரிசெய்யப்பட வேண்டும்.

மேலும் மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று நான் நம்புகிறேன். அதன்பின் ஓவலில் நடைபெறும் இறுதிப்போட்டியின் மூலாம் யார் கோப்பையை வெல்வார்கள் என்பது தீர்மானிக்கப்படும். மேலும் இந்தியா வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி சில சிறிய தவறுகளை சரி செய்ய வேண்டும், அது நடந்தால் அணி மீண்டும் களமிறங்க தயாராக இருக்கும்” என்று கூறியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

மான்செஸ்டரில் இதுவரை இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள நிலையில் அதில் இதுவரை எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்ததில்லை. மேலும் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இந்த மைதானத்தில் விளையாடவுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி முதல் முறையாக மான்செஸ்டரில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்ற முடியுமான என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement