
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது. தனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்தது.
முன்னதாக இத்தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே இந்தியா வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நாக்பூர், டெல்லியை விட 4.8 டிகிரி அளவுக்கு முதல் நாளிலேயே சுழன்ற இந்தூர் பிட்ச் மிகப்பெரிய சவாலாக அமைந்து இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதன் காரணமாக ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்திற்கு மோசம் என்று ரேட்டிங் வழங்கி 3 கருப்பு புள்ளிகளை ஐசிசி தண்டனையாக வழங்கியது. அத்துடன் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் பொதுவாக முதல் 3 நாட்கள் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதே இந்திய மைதானங்களின் இலக்கணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள் தாண்டாத அளவுக்கு இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு வருகிறது.