
நட்சத்திர கிரிக்கெட் வீரர் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு ஏற்பட்ட காயத்தால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் முழு உடல் தகுதியை பும்ரா இன்னும் நூறு சதவீதம் எட்டவில்லை. தற்போது பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடப் போகிறார். இந்த நிலையில் கடந்த 2018 -19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்த தொடரின் கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலே தொடரை வென்று விடும் என்று நிலையில் இருந்தது.
அப்போது நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பயிற்சியாளர் பரத் அவர்களிடம் தான் மெதுவாக பந்து வீசி கொள்கிறேன் என்றும் என்னால் வேகமாக வீச முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தான் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக உணர்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்துள்ள பரத், இந்தத் தொடர் பிறகு ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் இந்திய அணிக்கு வா. இந்த டெஸ்ட் போட்டியிலும் மெதுவாக வீசிக்கொள். ஆனால் பேட்ஸ்மேனுக்கு நீ சோர்வாக இருக்கிறாய் என்று தெரியாது.