
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று முதல் இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் தொடக்க வீரரர்களாக கேப்டன் ரோகித் – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில், தலா 3 பவுண்டரியை விரட்டிய ரோகித் 12 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் குன்னமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா ஒரு ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும் நாதன் லையனிடம் விக்கெட்டை இழந்தனர்.