
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வீரர் ஷுப்மன் கில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “இப்போட்டியில் ஒரு அணியாக, ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் முதலில் ஒரு பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம். அதுவே எங்களுடைய முக்கிய விவாதப்பொருளாக இருந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அவரவர் விளையாட்டுத் திட்டம் இருக்கும், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற முயற்சிப்போம்.