ENG vs IND: மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இணையும் ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியனது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி இன்று இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் இங்கிலாந்து நிலைமைகளில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு எதிரணி பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. மேற்கொண்டு இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவுள்ள அவர் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்ச்சர் சில போட்டிகளில் அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதியில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் திரும்ப சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கவுண்டி போட்டிகளில் விளையாடவுள்ளார். இதில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆர்ச்சர் நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பார்.
Also Read: LIVE Cricket Score
இதனை இங்கிலாந்து அணித் தேர்வுக்குழுவும் உறுதி செய்துள்ளது. அதன்படி ஜூன் 22ஆம் தேதி சசெக்ஸ் மற்றும் டுர்ஹாம் அணிகளுக்கு இடையேயான கவுண்டி சாம்பியான்ஷிப் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சசெக்ஸ் அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவுள்ள நிலையில், அவரது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சு குறித்து இப்போட்டியின் மூலம் முடிவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now