
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமான ரோஹித் சர்மா இதுநாள் வரையிலும் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்களைக் குவித்துள்ளர். இதில் 18 அரைசதங்களும், 12 சதங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சேவை செய்த கேப்டனுக்கு, சமூக ஊடக பதிவுகள் மூலம் அல்லாமல், களத்தில்தான் சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,"ரோஹித் சர்மா சமூக ஊடகங்களில் விளையாடாமல் மைதானத்திலேயே ஓய்வு பெற்றிருந்தால், அது மிகவும் பொருத்தமான பிரியாவிடையாக இருந்திருக்கும்.