
Lords Test: மூன்றாவது டெஸ்டில் ஷுப்மான் கில்லின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மிகவும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் ஷுப்மான் கில் மிகவும் ஆக்ரோஷமாக கணப்பட்டார். மேலும் அவர் அடிக்கடி எதிரணி வீரர்களுடன் வாக்கு வாதத்தி ஈடுபட்டிருந்தார். இதைப் பார்த்த சில ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும், அந்த போட்டியில் ஷுப்மான் விராட் கோலியைப் பின்பற்ற முயன்றதாக கூறினர். இருப்பினும் அது எந்தவகையிலும் இந்திய அணிக்கு உதவவில்லை.
மறாக அப்போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடியா நிலையிலும் 22 ரன்களில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியதுடன் 1-2 என்ற கணக்கில் தொடரிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் தற்சமயம் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷுப்மன் கில்லின் செயல்பாடுகளை முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.