
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் நடைபெற இருக்கு முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த முறையும் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளதால், இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், அரையிறுதி போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.