
இந்திய அணியின் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணிகளில் புதிய பேட்ஸ்மேன்கள் வந்திருக்கிறார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பிய புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் சதம் அடித்து தன்னை நிரூபித்ததோடு, தொடக்க இடத்தில் வந்து விளையாடினார் என்பது தான் முக்கியமானது.
ஏனென்றால் அவர் துவக்க இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரம்கில் தன்னை மூன்றாவது வீரராக பயிற்சியாளரிடம் கேட்டு கீழே இறக்கிக் கொண்டார். இதனால் கில் எப்படியும் அந்த இடத்தில் இருந்து நகர போவதில்லை. இதனால் புஜாராவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறது.
தற்பொழுது இந்த இரு இளம் வீரர்கள் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன். எதிரணிகள் அவர்களை மிக நன்றாக அறிந்து கொள்ள தொடங்கும். ஜெயஸ்வால் மற்றும் கில்லுக்கு இந்தச் சுற்றுப்பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் யூகங்களை முறியடித்து விளையாடுவது முக்கியமாகும்.