
ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போதே இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இது அச்சமயத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஏனெனில் இந்திய அணியில் ஷுப்மன் கில்லை விட சீனியர் வீரர்களான கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இருக்கும் சமயத்திலும் ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பதவி வழங்கியது பெரும் விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. ஆனால் தேர்வு குழுவினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஷுப்மன் கில்லை துணைக்கேப்டனாக நியமனம் செய்ததாக தகவல்கள் தெரிவித்தன. இது முன்னாள் வீரர்கள் பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஆனால் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுக்கும் வகையில் ஷுப்மன் கில் அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதங்களையும், சதங்களையும் விளாசியதுடன் ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு பிறகு ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கணிப்பை ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.