
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இந்த அணியில், ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மும்பை ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியானுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக மற்றொரு அறிமுக வீரரை அணியில் சேர்த்திருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற வீரர்களை விட தனுஷ் கோட்டியானுக்கு இந்த டெஸ்ட் அணியில் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஒரு மாதத்திற்கு முன்பு தனுஷ் கோட்டியான் இங்கு வந்து பயிற்சி போட்டிகளில் விளையாடினார். அதேசமயம் குல்தீப் யாதவிற்கு ஆஸ்திரேலிய விசா இல்லை. அதனல் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சீக்கிரம் இங்கு வருவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அந்த சமயத்தில் தனுஷ் கோட்டியான் தயாராக இருந்ததன் காரணமாகவே அவரை நாங்கள் அணியில் சேர்த்துள்ளோம். ஆனால் நகைச்சுவை ஒருபுறம் இருக்கட்டும்.