
Rohit Sharma terms Ravi Shastri's assertion as 'rubbish' (Image Source: Google)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது . இதில் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் ஆகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் 3-வது டெஸ்டில் இந்திய அணி சிறிது அதீத நம்பிக்கையுடன் விளையாடியதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணி மீதான விமர்சனம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “இரண்டு டெஸ்ட் போட்டியை வென்றால் வெளியே இருப்பவர்கள் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். இந்த பேச்சு அனைத்தும் குப்பையில் போட வேண்டும். நீங்கள் எப்போதுமே உங்கள் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே நினைப்பீர்கள்.