
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் என மூவரும் கடந்த ஆண்டு நவம்பரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடி இருந்தனர். அதன் பின்னர் மூவரும் சர்வதேச டி20 போட்டியில் விளையாடவில்லை. யஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த தலைமுறையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் டி20 ஃபார்மெட்டில் விளையாட தயாராகி விட்டனர் என நான் நினைக்கிறேன். அதனால் மூத்த வீரர்கள் இந்த புதிய டெம்ப்ளேட்டில் தங்களை பொருத்திக் கொள்வது சவாலான காரியம். இது ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான ஆண்டு. அதனால் இந்திய அணி குறைவான டி20 போட்டிகளில் தான் விளையாடும்.