
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. அஹ்மதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்து 47 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பேட்டிங்கில் கடுமையாக திணறினர்.
பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 54 ரன்களும், கே.எல் ராகுல் 66 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (7), மிட்செல் மார்ஸ் (7) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (4) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அதன்பின் கூட்டணி சேர்ந்த டிராவிஸ் ஹெட் – மார்னஸ் லபுஷாக்னே ஜோடி, இந்திய வீரர்களுக்கு சிறிய வாய்ப்பு கூட கொடுக்காமல் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.