
நடப்பாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு அணிகளும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு முன் தனது கடைசி டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கைப்பற்றியதன் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 14 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்பட்டுள்ளார்கள். கேப்டனாகவும் ரோஹித் சர்மா அசத்தி இருக்கிறார்.
உலகக்கோப்பை தோல்விக்கு பின், டி20 உலகக்கோப்பை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட மாட்டார்கள் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் தொடரின் வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா பேசுகையில், “என்னை பொறுத்தவரை 50 ஓவர் உலகக்கோப்பை தோல்வி தான் மிகப்பெரிய ஏமாற்றம். ஏனென்றால் நான் ஒருநாள் போட்டிகளை பார்த்து தான் வளர்ந்துருக்கிறேன்.