
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டவது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களைத் தவிர்த்து வேறெந்த வீரரும் இரட்டை இலக்கை ரன்களை எட்டாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 12.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுஃபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுஃப் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றர்.
இதில் ஒமைர் யூசுஃப் 22 ரன்களையும், சைம் அயூப் 36 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் அணி 5.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியி வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இதில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுஃபியான் முகீம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.