
Team India include 4 spinners as net bowlers to the Border-Gavaskar Trophy squad - Reports (Image Source: Google)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்குகிறது.
மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் இம்முறை வழக்கத்தை விட கூடுதல் விறுவிறுப்புடன் இருக்கப்போகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா அணி கடைசியாக நடந்த மூன்று பார்டர் கவாஸ்கர் தொடரையும் இழந்திருக்கிறது.
ஆகையால் இம்முறை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் கடுமையாக பயிற்சி ஈடுபட்டு வருகிறது ஆஸ்திரேலியா அணி. அதேநேரம் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் இன்னும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.