பந்துவீச்சாளர்களை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, அதனால் நாங்கள் அதில் நிச்சயாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த ஹைதராபாத் அணி மீண்டும் தங்களுடைய வெற்றி பாதைக்கும் திரும்பியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “உண்மையைச் சொன்னால் இது ஒரு அற்புதமான ஸ்கோர் என்று நினைக்கிறேன். இன்னும் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அவர்கள் எதிரணி இந்த இலக்கை எட்டியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆட்டத்தில் நாங்கள் சில கேட்சுகளை தவறவிட்டோம். மேலும் இப்போட்டியில் அபிஷேக் சர்மா மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தார்.
Trending
அவருக்கு பந்துவீச மிகவும் கடினமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, அதனால் நாங்கள் அதில் நிச்சயாம் கற்றுக்கொள்ள வேண்டும். அபிஷேக் மற்றும் ஹெட் இடையேயான பார்ட்னர்ஷிப் அற்புதமானது, அவர்கள் எங்களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் தரவில்லை. அதேசமயம் எனது தரப்பில் இருந்து பந்துவீச்சாளர்களை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம்.
இதில் ஃபெர்குசன் காயமடைந்து வெளியேறியது எங்களை சற்று அழுத்ததில் தள்ளியது. ஏனெனில் அவரை போன்ற வீரர்களால் தேவையான விக்கெட்டைகளை கைப்பற்ற முடியும். ஆனால் காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும். இவை நாம் முன்னோக்கிச் செல்லும்போது கற்றுக்கொண்ட பாடங்கள். இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்த விதம் நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் 42 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 34 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதுடன் 141 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனமூலம் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now