
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 19, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேசமயம் அவருக்கு பதிலாக டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வேகப்பந்து வீச்சாளார் குவேனா மகாபா தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணைக்கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷிவம் தூபே, ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐய்ர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.