
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 20, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது இன்று ஒருநாள் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது பெரும் விவாதமானது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் பெயர் நீக்கப்பாட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்சமயம் அந்த பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
2. இங்கிலாந்தின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட் கடந்த 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர், தற்போது இங்கிலாந்து அண்டர்19 மற்றும் அண்டர் 17 அணிகளின் பயிற்சியாளராக விரும்புதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கூடிய விரைவில் அவர் பயிற்சியாளராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.