விராட் கோலி இல்லாதது இங்கிலாந்துக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் - மொயீன் அலி!
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து - இந்திய அணிக்களுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வாதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் 30 சதங்களையும், 31 அரைசதங்கள் என 9230 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மொயீன் அலி, “விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அடியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் ஃபார்மேட்டை முன்னெடுத்துச் சென்ற ஒரே வீரர் வீரர் விராட் கோலி மட்டும் தான். அவர் இந்த விளையாட்டுக்காக, குறிப்பாக இந்தியாவிற்காக, நிறைய செய்துள்ளார். அதிலும் குறிப்பாக சச்சினுக்குப் பிறகு அனைவரும் பார்க்க விரும்பிய வீரர் அவர் தான் என்று நான் நினைக்கிறேன்.
அவர் அற்புதமான சாதனைகளை படைத்தவர், பார்க்க ஒரு சிறந்த வீரர் - மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர் மற்றும் ஒரு சிறந்த கேப்டன். அவர் விளையாடிய பாணி பலரையும் ஊக்கப்படுத்தியது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, விளையாட்டுக்கும் ஒரு பெரிய அடியாகும். அதேசமயம் அவர் இத்தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது நிச்சயமாக, இங்கிலாந்துக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறந்த வீரர்கள். அவர்கள் இருவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சில முறை விளையாடிவுள்ளனர். எனவே அவர்களுக்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. ரோஹித் கடந்த முறை இங்கு சிறப்பாக விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தியுள்ளனர். எனவே அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்
Also Read: LIVE Cricket Score
முன்னதாக கடந்த 2021 ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் வலுவான செயல்திறனில் ரோஹித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். அதிலும் அவர் தி ஓவலில் ஒரு மறக்கமுடியாத சதம் உட்பட 368 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ரோஹித் மற்றும் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் வெளிநாட்டு நிலைமைகளில் அனுபவம் குறைந்த பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்புகளையும் வழங்க வேண்டிய சவாலை இந்திய அணி இப்போது எதிர்கொள்ளவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now