Advertisement
Advertisement
Advertisement

விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் - ஸ்மித், யுவராஜ் சிங் கணிப்பு!

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக விராட் கோலி இருப்பார் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கணித்துள்ளனர்.

Advertisement
விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் - ஸ்மித், யுவராஜ் சிங் கணிப்பு!
விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் - ஸ்மித், யுவராஜ் சிங் கணிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 04, 2024 • 08:55 PM

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து கணிப்புகளை முன்னள் வீரர்கள் கணித்து வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 04, 2024 • 08:55 PM

அந்தவகையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை அடிக்கும் வீரராக இந்திய அணியின் விராட் கோலி திகழ்வார் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பாவன் யுவராஜ் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித் “இந்த தொடரில் விராட் கோலி தான் அதிக ரன் எடுப்பவராக இருப்பார்.

Trending

ஏனெனில் அவர் ஒரு சிறப்பான ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறார். மேலும் அவர் சில சிறந்த ஃபார்மைக் கொண்டு வருகிறார். அதன் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுக்கும் வீரர்களில் அவர் முன்னணியில் இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் நான் மேலும் ஒரு டாப் ஆர்டர் பேட்டருடன் செல்கிறேன். அந்த வகையில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அந்த போட்டியில் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். 

 

மேலும் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “ரிஷப் பந்த் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், ஏனெனில் அவர் மிகப்பெரும் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அதேசமயம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரராக விராட் கோலியைப் பார்க்கிறேன். ஏனெனில் அவர் மிகச்சிறந்த ஐபிஎல் தொடரில் இருந்து இதில் பங்கேற்கிறார்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement