Advertisement
Advertisement
Advertisement

%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
Image Source: Google
Advertisement

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!

By Bharathi Kannan November 21, 2023 • 20:38 PM View: 331

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் பார்த்த உலகக்கோப்பை தொடராக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.இதற்காக புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதியை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த ஐசிசி செயற்குழு கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்பந்து விளையாட்டை போல் கிரிக்கெட்டிலும் ஸ்டாப் கிளாக் நடைமுறை அமலுக்கு வருகிறது. 

Advertisement

Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024