Ban vs sl
விதியை மீறிய தமிம் இக்பால்; அபராதம் விதித்த ஐசிசி!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால், மைதானத்தில் ஆபாசமான வார்த்தைகளை பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கிலும் பதிவானது.