Csk
சிஸ்கேவுக்கு இந்த விஷயம் தலைவலி தான் - சிஇஓ காசி விஸ்வநாதன்!
இந்தியாவில் நடைபெற்ற 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை இன்னும் முடியாத நிலையில் மீண்டும் இந்த ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் ஏற்பாடுகளில் தற்போது பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை அணி இந்த ஆண்டு மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரு சிக்கல் குறித்து தற்போது அந்த அணியின் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன் ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார்.