England vs india
மேல் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்லும் கேஎல் ராகுல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால், கேஎல் ராகுல் தான் இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்துவதாக இருந்தது.
ஆனால் கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியதால் ரிஷப் பந்த் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.