Ind vs wi
களத்தில் ஆக்ரோஷமடைந்த ரோஹித் - வைரலாகும் காணொளி!
ரோஹித் சர்மா, தோனியை போல நிதானமான கேப்டன் என பெயர் பெற்றவர். எவ்வளவு கூலான கேப்டனாக இருந்தாலும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வீரர்கள் தவறு செய்தால், அவர்களுக்கும் கோபம் வரும் என்பதற்கு ரோஹித் சர்மா விதிவிலக்கல்ல.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின்போது ரோஹித் சர்மா, அப்படித்தான் கடுப்பாகி பந்தை எட்டி உதைந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடிக்க, 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 178 ரன்கள் அடித்து, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.