Ipl 2023
தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!
இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று மும்பை மைதானத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சென்னை சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் சான்ட்னர் இருவரிடமும் சிக்கி ஐந்து விக்கட்டுகளை இழந்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இசான் கிஷான் 32 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே கான்வே ரன் இல்லாமல் போனாலும், மொயின் அலி உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அணியில் இடம் பெற்ற ரகானே யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு எளிதான ஒரு வெற்றியை வான்கடே மைதானத்தில் வாங்கி தந்து விட்டார். இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ரகானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து சென்னை அணிக்காக இரண்டாவது அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். மொத்தம் 27 பந்துகளை சந்தித்த அவர் 61 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
Related Cricket News on Ipl 2023
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24