Khaleel ahmed
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
இந்திய அணி அடுத்த மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த தொடருக்காகவே தன்னை தயார்படுத்திக்கொள்ள பும்ராவிற்கு இந்த ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. மேற்கொண்டு பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது. இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Related Cricket News on Khaleel ahmed
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24