Kris srikkanth
உலகக்கோப்பை நினைவுகள் குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த நாள் இது.
அந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அப்போதைய ஜாம்பவானாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது.