Ms dhoni retirement
என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன் - எம்எஸ் தோனி!
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த பின் இந்திய அணியின் தோனி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் உள்ளிட்டோர் சிறு குழந்தைகள் போல் ஓய்வறையில் கண் கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியிருந்தார். பெரும்பாலும் உணர்வுகளை வெளிப்படுத்தாத தோனி அழுதார் என்று கூறியது அவரது ரசிகர்களை கலங்க வைத்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி தோல்வி குறித்தும், சஞ்சய் பங்கர் பகிர்ந்த விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, “மிகமுக்கியமான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடையும் போது உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.