Rilee rossouw
அவர் கொடுத்த நம்பிக்கை தான் எனது அதிரடிக்கு காரணம் - ரிலே ரோஸோவ்!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது 2 -1 என்ற கணக்கில் இந்த டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளும் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2-0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டியானது இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இந்த இமாலய ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமான ரைலி ரூஸோவ் திகழ்ந்தார்.