Rishabh pant
SA vs IND: ஸ்லேஜிங்கில் வச்சு செய்யும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.
இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சையும் தாண்டி வீரர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் மோதி கொண்டும், ஸ்லேஜ் செய்து கொண்டும் வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு இந்த டெஸ்ட் போட்டி பெரும் பொழுதுப்போக்காக அமைந்துள்ளது. இதனால் இந்த போட்டியின் முடிவு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.