Suyrakumar yadav
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டன்களாக ராகுல், சூர்யா நியமனம்!
இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் மூத்த வீரர்கள் இந்திய அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முடிவு செய்தது பிசிசிஐ.
ஆனால், விராட் கோலி தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இடம் பெற விரும்பவில்லை எனக் கூறி இருந்த நிலையில், ரோஹித் சர்மாவும் அதே முடிவை எடுத்துள்ளார். மூத்த வீரர்கள் விலகல் மற்றும் இனி டி20 உலகக்கோப்பை முடியும் வரை ஒருநாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையும் என்ற நிலையில், ஒருநாள் அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது