Team of the tournament
ஐசிசி உலகக்கோப்பை 2023: கனவு அணியை அறிவித்த ஐசிசி; 5 இந்திய வீரர்களுக்கு இடம்!
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் உள்ளடங்கிய கனவு அணியை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஐசிசி கனவு அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியின் தொடக்க வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் மற்றும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.