Wi vs sa 3rd t20i
போட்டி முழுவதும் விளையாடி வெற்றிபெற நினைத்தேன் - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.