
முன்னாள் இந்திய வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா 2024 ஆம் ஆண்டிற்கான தனது ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். அவர் தனது அணியில் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் மூன்று இங்கிலாந்து வீரர்களை சேர்த்துள்ளார். இது தவிர, இந்த அணியில் நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரருக்கும் இடம் கொடுத்துள்ளார்.
அந்தவகையில் ஆகாஷ் சோப்ரா தனது அணியில் இந்திய அணியின் இளம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் பென் டக்கெட் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்துள்ளார். இதில் ஜெய்ஸ்வால் 2024 ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவர் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் 1478 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம், பென் டக்கெட் இங்கிலாந்துக்காக 17 போட்டிகளில் 32 இன்னிங்ஸ்களில் 1149 ரன்கள் எடுத்தார். இது தவிர அவர் தனது அணியில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோருக்கும் இடம் கொடுத்துள்ளார். இதில் ஜோ ரூட் அற்புதமான ஃபார்மில் இருந்துள்ளார். அவர் 17 டெஸ்ட்களில் 31 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,556 ரன்கள் எடுத்ததன் மூலம் 2024ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.