
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற தனது கணிப்பை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக வழங்கவேண்டும். மேற்கொண்டு சாய் சுதர்ஷன் அல்லது தேவ்தத் படிகல் மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.