
இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் இடங்களை யார் நிரப்புவார், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார், இத்தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலியும் ஒருவர் என்று பாராட்டிவுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பெரிய ஷூக்களை நிரப்பக்கூடிய ஒரு ஆழமான திறமைக் குழுவை இந்தியா கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.