Advertisement

ரோஹித், கோலியின் ஓய்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை - ஷுப்மன் கில்!

ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Advertisement
ரோஹித், கோலியின் ஓய்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை - ஷுப்மன் கில்!
ரோஹித், கோலியின் ஓய்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை - ஷுப்மன் கில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 08, 2025 • 10:32 PM

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 08, 2025 • 10:32 PM

இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வுபெறுவது குறித்து ஏதும் ஆலோசிக்கப்படவில்லை என அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார்.

Trending

இதுகுறித்து பேசிய ஷுப்மன் கில், “ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. எங்களுடைய ஆலோசனைகள் அனைத்தும் இந்த போட்டியை வெல்வது பற்றி மட்டும் தான் இருந்தது. இந்த போட்டியை வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். ரோஹித் சர்மாவும் அதையேதான் யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

முதலில் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதில் அவர் கவனம் செலுத்துகிறார் என்று நினைக்கிறேன். நாளை போட்டி முடிந்ததும், அவர் ஒரு அழைப்பை எடுப்பார் என்று நினைக்கிறேன், ஆனால் இதுகுறித்து அணியில் யாரிடமிருந்தும் எந்த தகவலையும் நான் கேள்விப்படவில்லை. தற்போது எங்கள் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். அவர் அணியில் தொடக்க ஆட்டக்காரராக பலம் சேர்க்கிறார்.

விராட் கோலியின் ஆட்டம் குறித்து சொல்லத் தேவையில்லை. அவர் அந்த அளவுக்கு சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.  அணியில் பின்வரிசை ஆட்டக்காரர்கள் வரை பேட்டிங் வரிசை நன்றாக இருப்பதால், முன்வரிசை ஆட்டக்காரர்கள் அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாடலாம். பெரிய போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். ஒரு பேட்ஸ்மேனாக, ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் அதைச் செய்ய விரும்புகிறீர்கள். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் ஒவ்வொரு முறையும் 50 அல்லது 100 ரன்கள் எடுப்பது சாத்தியமில்லை. பெரிய ஆட்டங்களில், உங்கள் ஷாட்களை விளையாடுவதற்கு முன்பு சில பந்துகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். நாங்கள் அனைவரும் இறுதிப் போட்டிக்காக உற்சாகமாக இருக்கிறோம். கடந்த முறை, 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை, ஆனால் இந்த முறை வேலையைச் செய்து முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement