Advertisement

யாருக்கு வாய்ப்பு? ஷுப்மன் vs ராகுல் - ரிக்கி பாண்டிங் பதில்!

ஷுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் எனும் குழப்பத்திற்கு ரிக்கி பாண்டிங் சிறந்த ஆலோசனையை கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 07, 2023 • 12:20 PM
Ricky Ponting predicts potential change to India's batting order!
Ricky Ponting predicts potential change to India's batting order! (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நிலவிவரும் ஒரே குழப்பம் என்னவென்றால், கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவலில் வாய்ப்பு கொடுத்து ஓபனிங் இறங்க வைக்க வேண்டும் என்பதுதான்.

கேஎல் ராகுல் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று ஓபனிங் செய்தார். மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தபட்டார்.

Trending


ஷுப்மன் கில், கிடைத்த இந்த வாய்ப்பை எதிர்பார்த்த வகையில் பயன்படுத்தவில்லை. முதல் இன்னிங்ஸ் 21 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் என ஆட்டம் இழந்தார். ஒட்டுமொத்த அணியே தடுமாறினாலும், ஷுப்மன் கில்லுக்கு கிடைக்காத வாய்ப்பு கிடைத்ததால் அவர் மீது எதிர்பார்ப்பிற்கு ரன்கள் அடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் யாருக்கு ஓபனிங் வாய்ப்பு கொடுக்க வேண்டும்? இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்கிற விவாதங்கள் நிலவி வருகிறது? இதற்கு மிகச்சிறந்த அறிவுரையை ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார் . 

இதுகுறித்து பேசிய அவர், “கேஎல் ராகுல் இங்கிலாந்து மைதானங்களில் முந்தைய காலங்களில் நன்றாக செயல்பட்டிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரவுள்ளது. அதனை கருத்தில்கொண்டு ரோஹித் சர்மா செயல்படவேண்டும். இங்கிலாந்து கண்டிஷங்களில் கேஎல் ராகுல் கவனிக்கப்படக்கூடிய வீரராக இருப்பார்.

அதேநேரம் ஷுப்மன் கில் திறமையான வீரர். அவரது ஃபார்மை மதித்து பிளேயிங் லெவனில் வைத்திருக்க வேண்டும். நேர்த்தியாகவும் பொறுப்புடனும் ஆட்டத்தை அணுகுகிறார். ஆகையால், என்னை பொறுத்தவரை, இரண்டு பேரும் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். கில் ஓபனிங் செய்தால், கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டும்.

இங்கிலாந்து மைதானங்களில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆகும். துவக்கத்தில் இருந்தே ஸ்விங்கை பார்க்கலாம். அப்படியிருக்க, கேஎல் ராகுல் அணுகுமுறை நன்றாக எடுபடும் என நினைக்கிறேன். ஆகையால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கேஎல் ராகுலை விளையாடவைக்கலாம். சிறந்ததாக கருதுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement