
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது. மேலும், இந்தத் தொடரின் வெற்றி புள்ளிகளின் சதவிகிதமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் பங்கேற்க இருக்கும் அணிகளையும் தீர்மானிக்க இருக்கிறது.
இந்த நிலையில், ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி உருவாக்கிய அணியை வைத்துத்தான் வெற்றிகரமாக செயல்படுகிறார் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை நான் உறுதியாக ஒப்புக்கொள்வேன். என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடைய கேப்டன்ஷிப்பில் பெரிய வித்தியாசமில்லை. காரணம், விராட் கோலிதான் இந்த டெம்ப்ளேட்டை உருவாக்கினார். என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் அணியை விராட் கோலியே சிறப்பாக வழிநடத்தினார்.