Advertisement

இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை - ரோஹித் சர்மா!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த ரோஹித் சர்மா, இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 20, 2023 • 16:31 PM
Rohit Sharma opines on Jasprit Bumrah's prolonged absence from national side
Rohit Sharma opines on Jasprit Bumrah's prolonged absence from national side (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் ஜஸ்பிரீத் பும்ரா, கடந்த ஆசியக் கோப்பை தொடரின் போது காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு செப்டம்பர் மாதம் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அவருக்கு மறுபடியும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு விலகினார்.

அதன்பிறகு டி20 உலகக்கோப்பை உட்பட தற்போது வரை எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. கடந்த டிசம்பர் மாதம் குணமடைந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. ஆனால் அணியில் எடுக்கப்படவில்லை.

Trending


பிப்ரவரி மாதம் இறுதியில் மீண்டும் காயம் அடைந்துவிட்டார் என்றும் தெரியவந்தது. அதன் பிறகு மார்ச் மாதம் முதல் வாரம் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் கிட்டத்தட்ட 9 மாத காலம் அவரால் எந்தவித சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட முடியாது என்று உறுதியாகியது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மாவிடம் பும்ரா பற்றி கேள்விக்கு எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “பும்ரா அடுத்த எட்டு மாதங்களுக்கு எந்தவித போட்டிகளிலும் இருக்க மாட்டார். தற்போது இருக்கும் வேகப்பந்து பேச்சாளர்கள் எந்தவித குறையும் கூற முடியாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

பும்ராவின் இடத்தை நிரப்புவது கடினமானது என்றாலும், தற்போது வரை ஒட்டுமொத்த அணியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆகையால் இனி பும்ரா பற்றி யோசிப்பது எந்தவித பிரயோஜனமும் இல்லை. யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. விட்டுவிடுவோம்.” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement
Advertisement